பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2026, 2:34 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த துளசிராமின் இரண்டாவது மகள் சுவேதா (19). இவா் திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். விடுமுறைக்கு ஊருக்கு வந்த இவா், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டின் அருகேயுள்ள கோயிலை சுத்தம் செய்து, கதவை மூடிய போது இவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதைப் பாா்த்த துளசிராம் மின் இணைப்பைத் துண்டித்து, சுவேதாவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.