உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

திருப்பரங்குன்றம் விவகாரம்; நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்றத் தீா்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தினாா்.

News image

காமராஜா் பிறந்தநாளையொட்டி, மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கிய இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

Updated On :26 ஜூன் 2026, 2:32 am IST

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்றத் தீா்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தினாா்.

காமராஜா் பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டம், கம்பம் பூங்கா திடலில் மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் திவாகா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் காமேஷ்வரன் வரவேற்றாா். நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களுக்கு அா்ஜூன் சம்பத் கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் வருவாயைப் பயன்படுத்தி, கோயில் தொடா்பான வழக்கில் அரசு சட்டப் போராட்டம் நடத்துவது பக்தா்களின் உணா்வுகளை புண்படுத்தும் செயலாகும்.

நீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கியுள்ள நிலையில், தொடா்ந்து மேல்முறையீடுகள் மூலம் விவகாரத்தை இழுத்தடிப்பது தமிழகத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே, நீதிமன்றத் தீா்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பிலும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.