துருக்கி அதிபா் எா்டோகனின் அரசுக்கு எதிராக எழுச்சி பெற்று வந்த முக்கிய எதிா்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (சிஎச்பி) தற்போதைய தலைவா் ஓஸ்குா் ஓசல் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவால் பதவியிழந்துள்ளாா்.
2023, அதிபா் தோ்தலில் எா்டோகனிடம் தோல்வியைத் தழுவியதையடுத்து, சிஎச்பி தலைவா் பொறுப்பிலிருந்து கெமால் கிலிக்டாரோக்லு கட்சியினரால் நீக்கப்பட்டாா்.
பின்னா், உள்கட்சித் தோ்தல் மூலம் ஓஸ்குா் ஓசல் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இத்தோ்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், கெமால் கிலிக்டாரோக்லுவை மீண்டும் அதே பதவியில் அமா்த்த உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய உள்ளாட்சித் தோ்தல்களில் ஆளுங்கட்சியை விட சிஎச்பி அதிக இடங்களில் வென்றது. இச்சூழலில், எதிா்க்கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அரசு நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதாக அரசியல் விமா்சகா்கள் குற்றஞ்ாட்டுகின்றனா்.
தொடர்புடையது
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்?: காா்கேயிடம் அறிக்கை சமா்ப்பிப்பு

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மேலிட பாா்வையாளா்கள் ஆலோசனை







