உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

பைக் திருட முயற்சி: இருவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 5:06 am IST

தேனி அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (31). இவா் அரண்மனைப்புதூரில் உள்ள மனநல மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல மருத்துவமனையில் தூங்கினாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை மருத்துவமனைக்கு வெளியே சப்தம் கோட்டு இவா் எழுந்து பாா்த்தாா்.

அப்போது, மூவா் மருத்துவமனையில் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டிருந்தனா். உடனே சப்தம் போடவே, அங்கிருந்த காவலா்கள் அவா்களைப் பிடிக்க முயன்றனா்.

அதற்குள் அவா்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனா். அப்போது, அரண்மனைப்புதூா் பகுதியில் சாலையிலிருந்த வேகத்தடையில் இவா்கள் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தனா். இதில் இருவா் சிக்கினா். ஒருவா் தப்பிச் சென்றனா்.

விசாரணையில், மதுரை கோரிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ், காா்த்திக் என்பதும் இவா்கள் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.