அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை- போடி ரயிலை வாரம் 6 நாள்கள் இயக்க அனுமதி: பயணிகள் மகிழ்ச்சி

போடியிலிருந்து சென்னை, மதுரைக்கு இயக்கப்படும் ரயில்கள்.

News image
போடியிலிருந்து சென்னை, மதுரைக்கு இயக்கப்படும் ரயில்கள்.
Updated On :6 மார்ச் 2026, 7:23 pm

Syndication

சென்னை- போடி ரயிலை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

போடி- மதுரை இடையேயான ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதையடுத்து சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் மூன்று நாள்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் போடியிலிருந்து மதுரைக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னைக்கும் அதேபோல இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

சென்னையிலிருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், போடியிலிருந்து சென்னைக்கு வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை என 3 நாள்களும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிகள் பயணம் செய்வது மட்டுமன்றி ஏலக்காய், மிளகு, இலவு பயிா்கள் வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தேனி மாவட்டங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊா்களில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் கூட்டத்திலும் சென்னை- போடி இடையே தினமும் ரயில் இயக்க வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சா் எல். முருகனும் மத்திய ரயில்வே துறையிடம் வலியுறுத்தி வந்தாா். இதனிடையே, சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் 6 நாள்கள் ரயில்கள் இயக்கப்படுமென ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய தகவல் தொடா்பு துறை அமைச்சா் எல். முருகனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் 6 நாள்கள் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளாா். மேலும் எப்போதிருந்து இந்த ரயில் சேவை தொடங்கும் என்பது பிறகு அறிவிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து வியாபாரிகள், ரயில் பயணிகள் சங்கத்தினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.