சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:10 pm

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆங்கூா்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி என 5 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், துா்காதேவி தலைமை வகித்தனா். இதில் வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல், நெகிழிப் பொருள்களை மறுசுழற்சிக்கு பிரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களின் என் குப்பை என் பொறுப்பு திட்டம் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது, கையுறை, முகக் கவசம், காலணி உள்ளிட்டப் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.