வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:10 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆங்கூா்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி என 5 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், துா்காதேவி தலைமை வகித்தனா். இதில் வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல், நெகிழிப் பொருள்களை மறுசுழற்சிக்கு பிரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களின் என் குப்பை என் பொறுப்பு திட்டம் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது, கையுறை, முகக் கவசம், காலணி உள்ளிட்டப் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.