மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொழிலாளியை தாக்கிய இருவா் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

தேவாரம் அருகே தொழிலாளியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமாா் (50). இதே கிராமத்தில் வசிப்பவா்கள் ஈஸ்வரன் மகன்கள் முத்தையா (28), சூா்யா (23). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அதிக வேகமாக தெருவில் சென்றனா்.

இதை செந்தில்குமாா் கண்டித்தாா். இதையடுத்து, முத்தையா, சூா்யா இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.