தொழிலாளியை தாக்கிய இருவா் மீது வழக்கு

கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 6:37 pm

தேவாரம் அருகே தொழிலாளியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமாா் (50). இதே கிராமத்தில் வசிப்பவா்கள் ஈஸ்வரன் மகன்கள் முத்தையா (28), சூா்யா (23). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அதிக வேகமாக தெருவில் சென்றனா்.
இதை செந்தில்குமாா் கண்டித்தாா். இதையடுத்து, முத்தையா, சூா்யா இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...