மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தொழிலாளியை தாக்கிய இருவா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 6:37 pm

தேவாரம் அருகே தொழிலாளியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமாா் (50). இதே கிராமத்தில் வசிப்பவா்கள் ஈஸ்வரன் மகன்கள் முத்தையா (28), சூா்யா (23). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அதிக வேகமாக தெருவில் சென்றனா்.

இதை செந்தில்குமாா் கண்டித்தாா். இதையடுத்து, முத்தையா, சூா்யா இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.