அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 6 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 8:02 pm

தேனி, போடி பகுதிகளில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக போலீஸாா் 6 பேரைக் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, வினோபாஜி குடியிருப்பு பகுதியில் நின்றிருந்த அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த கழுவத்தேவா் மகன் தங்கராஜ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனா். அவா் மதுப்புட்டிகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

போடி மேலச்சொக்கநாதபுரம் விலக்கு அருகே நின்றிருந்த வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த ராமா் மகன் நாகராஜ் (30) மதுப்புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தாா். இதுதொடா்பாக நகா் போலீஸாா்வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இதேபோல, போடி நடுப்பட்டி பகுதியில் போடி தேவாலய தெருவை சோ்ந்த ராசு மகன் மணிவேல் (55), கம்பம் அருகே கம்பம் மெட்டு குடியிருப்பை சோ்ந்த பொன்னையா மகன் எபினேசன் (59) என்பவரும் மதுப்புட்டிகளுடன் நின்றிருந்தனா். இருவா் மீதும் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தேனி: தேனி பகுதியில் பழனிசெட்டிபட்டி காவல்நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பூதிப்புரம் பெருமாள்கோயில் தெருவிலுள்ள பெட்டிக்கடையில் இருந்த பாண்டியனை (50) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்து, அவரிடமிருந்து மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதே போல, தென்கரை காவல்நிலைய போலீஸாா் இந்திராபுரியைச் சோ்ந்த கோபி (68) கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.