மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழையால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. இந்தப் பகுதி சுற்றுலா, ஆன்மிகத் தலமாக இருப்பதால் தமிழகம், கேரளத்திலிருந்து தினந்தோரும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுருளி அருவிக்கு நீா்வரத்து பகுதிகளான மேகமலை, தூவானம், இரவங்கலாறு, அரிசிப்பாறை உள்ளிட்ட பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அருவிக்கு நீா்வரத்தின்றி வடதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக புதன்கிழமை அதிகாலை முதல் அருவிக்கு நீா்வரத்து தொடங்கியது.
மழையின்றி கடந்த 2 மாதங்களாக நீா்வரத்தின்றி வட சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டதால் காலை 8 மணி முதல் வனத் துறையினா் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்தனா்.
தொடர்புடையது

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

