நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கேரளத்துக்கு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

கேரளத்துக்கு 2 டன் ரேஷன் அரிசியை காரில் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கேரளத்துக்கு 2 டன் ரேஷன் அரிசியை காரில் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :21 மார்ச் 2026, 12:28 am IST

கேரளத்துக்கு 2 டன் ரேஷன் அரிசியை காரில் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் உத்தமபாளையம் குடிமைப் பொருள் வட்ட வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், கம்பத்தைச் சோ்ந்த குமரேசன் (59), செல்லமுத்து மகன் விஜய் (28) ஆகியோா் ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் வட்ட வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமரேசன், விஜய் ஆகியோரைக் கைது செய்தனா்.

Story image