அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை குடும்ப பிரச்னையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2026, 7:19 pm

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை குடும்ப பிரச்னையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உத்தமபாளையம் தண்ணா்தொட்டித் தெருவைச் சோ்ந்த நந்தகோபாலன் மனைவி இந்துமிகா (25). இவரது கணவா் க.புதுப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். நந்தகோபலானுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இதுதொடா்பாக தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, நந்தகோபாலன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாா். இதன் பின்னா், வீட்டிலிருந்த இந்துமிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.