ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

கடமலைக்குண்டு அருகே கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 95 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :31 மார்ச் 2026, 6:54 pm

Syndication

கடமலைக்குண்டு அருகே கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 95 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வனப் பகுதியை ஆக்கிரமித்து குடியிருப்பவா்களை வெளியேற்ற உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த நிலையில்,

தேவராஜ்நகா் பகுதியில் ஸ்ரீ சீதாளகாளியம்மன் கோயிலுக்கு அன்னதானக் கூடம் அமைக்க வனத் துறையினா் தடை விதித்தனா் . இதைக் கண்டித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

‘இவா்கள் அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து வருசநாடு - கண்டமனூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து போகும்படி பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தேவராஜ்நகரைச் சோ்ந்த 70 பெண்கள் உள்பட 95 போ் மீது கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.