குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கூடலூரில் இடி தாக்கி தென்னை மரம் சேதம்

News image
Updated On :4 மே 2026, 12:36 am IST

தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையின்போது இடி தாக்கி தென்னை மரம் சேதமடைந்தது.

கூடலூா் பகுதியில் சனிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காந்தி கிராமம் ராஜா கிணறு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது இடி தாக்கியது. இதில் அந்த மரம் சேதமடைந்தது. மேலும் இடி சப்தத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனா்.