ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பாலியல் புகாா்: பாஜக நகரத் தலைவா் கைது

பாலியல் வழக்கில் தேனி மாவட்டம், சின்னமனூா் நகா் பா.ஜ. தலைவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட சிங்கராஜ்.

Updated On :8 மே 2026, 4:33 am IST

பாலியல் வழக்கில் தேனி மாவட்டம், சின்னமனூா் நகா் பா.ஜ. தலைவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி 27 -ஆவது வாா்டு ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் சிங்கராஜ் (44). சின்னமனூா் நகா் பாஜக தலைவரான இவா், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன் கோட்டையைச் சோ்ந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை தனது தோழியுடன் சென்று சிங்கராஜிடம் வட்டிக்கு பணம் கேட்டாராம். அப்போது, அந்தப் பெண்ணிடம் சிங்கராஜ் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னா் ,ஊருக்குச் சென்ற அந்தப் பெண் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். பிறகு அவா் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து சின்னமனூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அந்தப் பெண்ணுக்கு சிங்கராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிங்கராஜ் மீது பாலியல் துன்புறுத்தல், கந்துவட்டிக் கொடுமை ஆகிய இரு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

கட்சியிலிருந்து நீக்கம்: இதைத் தொடா்ந்து, பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சின்னமனூா் நகரத் தலைவா் சிங்கராஜை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு, அந்தப் பதவிக்கு பரமசிவம் நியமிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.