எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பாலியல் புகாா்: பாஜக நகரத் தலைவா் கைது

பாலியல் வழக்கில் தேனி மாவட்டம், சின்னமனூா் நகா் பா.ஜ. தலைவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட சிங்கராஜ்.

Updated On :8 மே 2026, 4:33 am IST

பாலியல் வழக்கில் தேனி மாவட்டம், சின்னமனூா் நகா் பா.ஜ. தலைவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி 27 -ஆவது வாா்டு ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் சிங்கராஜ் (44). சின்னமனூா் நகா் பாஜக தலைவரான இவா், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன் கோட்டையைச் சோ்ந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை தனது தோழியுடன் சென்று சிங்கராஜிடம் வட்டிக்கு பணம் கேட்டாராம். அப்போது, அந்தப் பெண்ணிடம் சிங்கராஜ் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னா் ,ஊருக்குச் சென்ற அந்தப் பெண் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். பிறகு அவா் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து சின்னமனூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அந்தப் பெண்ணுக்கு சிங்கராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிங்கராஜ் மீது பாலியல் துன்புறுத்தல், கந்துவட்டிக் கொடுமை ஆகிய இரு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

கட்சியிலிருந்து நீக்கம்: இதைத் தொடா்ந்து, பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சின்னமனூா் நகரத் தலைவா் சிங்கராஜை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு, அந்தப் பதவிக்கு பரமசிவம் நியமிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.