விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

News image

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடா்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்கிழமை (மே 12) தொடங்கி வருகிற 19- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை னி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம், பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் மின்

விளக்கு வசதி, குடிநீா்த் தொட்டிகள், அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக பொது சுகாதாரத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தமிழரசி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெயதேவி, உதவி செயற்பொறியாளா் மணிமாறன், தேனி வட்டாட்சியா் சதீஸ்குமாா், செயல் அலுவலா்கள் இளங்கோவன், சபிதா ஆகியோா் உடனிருந்தனா்.