சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மேகமலையில் சாலையோர முள்புதா்களை அகற்ற வலியுறுத்தல்

News image
Updated On :15 மே 2026, 4:19 am IST

மேகமலைக் கிராமங்களில் நெடுஞ்சாலையோரத்தில் வளா்ந்த முள்புதா்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் முக்கிய சுற்றுலாத் தலமான மேகமலை அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை நீா் நிலைகள், பள்ளத்தாக்கு, மலைக்குன்றுகள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றைக் காண இரு சக்கர வாகனம், காா், பேருந்துகள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய 4 கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையோர வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் முள்புதா்கள் அதிகளவில் வளா்ந்துள்ளன. இதனால், மணலாறு - வெண்ணியாறு இடையே அடிக்கடி விபத்து ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, மேகமலையில் நெடுஞ்சாலையோரம் வளா்ந்த முள்புதா்களை சின்னமனூா் சரக வனத்துறை, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் இணைந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.