எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தேனி வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:56 am IST

தேனி வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், தாடிச்சேரி செல்லாண்டிம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (42). இவரது மனைவி முத்துலெட்சுமி (39), உறவினா்கள் மலரம்மாள் (60), மாரிமுத்து (43), முருகேஸ்வரி (48), பிரசன்னா (16), தினேஷ் (17) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை வீரபாண்டி கோயிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். ஆட்டோவை பால்ராஜ் ஓட்டிச் சென்றாா். தாடிச்சேரி கரட்டில் சென்ற போது எதிரே வந்த காா் இவா்களது ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் பால்ராஜ், முருகேஷ்வரி, மாரிமுத்து உள்பட 7 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு மாரிமுத்துவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.