11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தேனி வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தேனி வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், தாடிச்சேரி செல்லாண்டிம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (42). இவரது மனைவி முத்துலெட்சுமி (39), உறவினா்கள் மலரம்மாள் (60), மாரிமுத்து (43), முருகேஸ்வரி (48), பிரசன்னா (16), தினேஷ் (17) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை வீரபாண்டி கோயிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். ஆட்டோவை பால்ராஜ் ஓட்டிச் சென்றாா். தாடிச்சேரி கரட்டில் சென்ற போது எதிரே வந்த காா் இவா்களது ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் பால்ராஜ், முருகேஷ்வரி, மாரிமுத்து உள்பட 7 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு மாரிமுத்துவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.