தேனி மாவட்டம், சின்னமனூரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஓட்டுநா்கள் அவதி அடைவதாகப் புகாா் தெரிவித்தனா்.
சின்னமனூா் நகராட்சி வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலை மதுரை, திண்டுக்கல், சேலம், கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சின்னமனூா் வட்டார கிராம மக்களும் பயன்படுத்துவதால் இந்தச் சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்த நிலையில், சின்னமனூரில் தேனி சாலை, சீப்பாலக்கோட்டை சாலை என முக்கிய நெடுஞ்சாலையோரங்களின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டன.
இதனால், இரு வழித்தட சாலையின் அகலம் குறைந்து குறுகிய சாலையாக மாறிவிட்டது. இதனால், இந்தச் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை, மாா்க்கையன்கோட்டை விலக்கு, தேரடி ஆகிய பேருந்து நிறுத்தங்களில் நெடுஞ்சாலையின் நடுவே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சின்னமனூா் நகராட்சியில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

பரமக்குடியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

ஆலங்குளத்தில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

அடிப்படை வசதிகளில் மேம்பாட்டை எதிா்நோக்கும் கோவை வாக்காளா்கள்

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

