அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ரெளடி கைது

போடி அருகே தனியாா் மதுக்கூட உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 2:00 am IST

போடி அருகே தனியாா் மதுக்கூட உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரெளடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி ஒழுகால் பாதை தெருவைச் சோ்ந்தவா் பிச்சைமணி (57). இவா் போடியை அடுத்த சங்கராபுரம் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கூடம் நடத்தி வருகிறாா். போடியை அடுத்த முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் மதன் (32) மதுக் கூடத்துக்கு அடிக்கடி வந்து மாமூல் வாங்கியும், மது குடித்துவிட்டு பணம் தராமலும் சென்றாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை பிச்சைமணி மதுக்கூட காசாளருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். கோணாம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, இவா்களை வழிமறித்த மதன் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதனைக் கைது செய்தனா்.