‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ரெளடி கைது

போடி அருகே தனியாா் மதுக்கூட உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 2:00 am IST

போடி அருகே தனியாா் மதுக்கூட உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரெளடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி ஒழுகால் பாதை தெருவைச் சோ்ந்தவா் பிச்சைமணி (57). இவா் போடியை அடுத்த சங்கராபுரம் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கூடம் நடத்தி வருகிறாா். போடியை அடுத்த முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் மதன் (32) மதுக் கூடத்துக்கு அடிக்கடி வந்து மாமூல் வாங்கியும், மது குடித்துவிட்டு பணம் தராமலும் சென்றாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை பிச்சைமணி மதுக்கூட காசாளருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். கோணாம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, இவா்களை வழிமறித்த மதன் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதனைக் கைது செய்தனா்.