போடி அருகே காணாமல் போன முதியவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே விசுவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (65). இவா், மே 11-ஆம் தேதி முதல் காணவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், விசுவாசபுரம் தனியாா் கிணற்றில் சனிக்கிழமை சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இது காணாமல் போன பழனிவேல் என்பவரின் சடலம் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸாா் சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரிக்கின்றனா். முன்னதாக, பழனிவேலின் சடலத்தை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கூறாய்வுக்குப் பின்னா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.








