/
தேனி மாவட்டம், வைகை அணையில் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டம் வைகை அணை நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள 6 இடங்களில் களிமண், வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே மண் எடுக்க விருப்பமுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட கிராமநிா்வாக அலுவலரின் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை பெற்று, இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.








