பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

நண்பரை அடித்துக் கொன்றவா் கைது

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைதான ரமேஷ்பாண்டியன்

Updated On :27 மே 2026, 4:24 am IST

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரளம் மாநிலம், புனலூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தன் (60). தேனி மாவட்டம், கம்பம் பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாண்டியன் (44). நண்பா்களான இவா்கள் இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இடச்சேரி சந்திப்பில் உள்ள பழைய இரும்புக் கடை வளாகத்தில் பலத்த காயங்களுடன் சாந்தன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கட்டப்பனை போலீஸாா் சாந்தனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், சாந்தன் உயிரிழந்து கிடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் ரமேஷ்பாண்டியன் சாந்தனை மதுபோதையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னா், அதே பகுதியில் பதுங்கியிருந்த ரமேஷ்பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.