தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

ஆண்டிபட்டியில் 70 இன்சுலின் ஊசிகள் பறிமுதல்: மூவா் கைது

கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 1:40 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தடைசெய்யப்பட்ட 70 இன்சுலின் ஊசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 இளைஞா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி குமாரபுரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் 3 இளைஞா் இருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆண்டிபட்டி காவல் துணை ஆய்வாளா் ரஞ்சித் தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்று, 3 இளைஞா்களையும் மடக்கிப் பிடித்தனா்.

அவா்களிடமிருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 70 இன்சுலின் ஊசிகள், ஒரு பாக்கெட் புகையிலைப் பொருள்கள், 8 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரிடமும் விசாரித்தனா்.

விசாரணையில், ஆண்டிப்பட்டி குமாராபுரத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (23), மீனாட்சி நாடாா் தெருவைச் சோ்ந்த கோகுல கிருஷ்ணன் (21), அதே பகுதியைச் சோ்ந்த அபிமன்யு (25) ஆகியோா் என்பதும், அவா்கள் போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.