தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருச்சுழியில் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம்

திருச்சுழி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

Updated On :21 டிசம்பர் 2013, 7:06 pm

திருச்சுழி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், இம் மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும், மருத்துவமனைக்கு என ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வலியுறுத்தியும், குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சுழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

  நகரச் செயலாளர் சீனிவாசக பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட குழு செயலாளர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் அன்புசெல்வன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.