விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மல்லாங்கிணர், திம்மன்பட்டி, முடியனூர், சூரம்பட்டி, கோவில்பட்டி உள்பட பல கிராமங்களில் போதைப் பொருள் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்கள் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு, காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துலெட்சுமி தலைமை வகித்தார்.
தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் 250-க்கும் மேற்பட்டோர் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் ஸ்டீபன் பொன்னையா, பாபு திருவராஜ், ரேணுகாதேவி, ஹேமலதா, கௌசல்யா தேவி தலைமையில் மல்லாங்கிணர் மெயின் ரோடு, பேரூராட்சி அலுவலகம், சென்னகேசவபெருமாள் கோவில் உள்பட பல்வேறு சாலையோரங்களில் வளர்ந்திருந்த முள்செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
முகாமில், மருத்துவர் பரிமளசெல்வன், முகம்மது ஜக்கரியா, வாகன ஆய்வாளர் ஹரிஹரன், அமுதா லட்சுமிகாந்தா, கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களிடையே பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
முகாம் ஏற்பாடுகளை கலைக் கல்லூரி நிர்வாகம், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள், மல்லாங்கிணர் பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

