அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4 நாள் பணியிடை பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 80 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான 4 நாள் பணியிடைப் பயிற்சி கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்

News image
Updated On :2 பிப்ரவரி 2013, 9:30 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 80 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான 4 நாள் பணியிடைப் பயிற்சி கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. கருத்தாளர் எஸ்.காசிவேல் வரவேற்றார்.

பயிற்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அதிகமான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இப் பயிற்சி பாடதிட்டத்துடன் தொடர்புடைய கருத்துக்கள் மட்டமல்லாது விரிவான பல சிறப்புக் கருத்துக்களையும் உள்ளடக்கி பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ளதால் மிகவும் பயனுள்ளதாக அமையும். மாணவர்களின் மனநிலைக் கேற்ப ஆசிரியர்கள் கற்பிக்கவும், மாணவர்களுக்கிடையே ஏற்படும் இடர்களைக் களையவும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்றார்.முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வராஜ்குமார் வரவேற்றார். மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் தலைமை ஆசிரியருமான எம்.அர்ச்சுணன் வாழ்த்துரை வழங்கினார்.

பயிற்சியின் கருத்தாளர்களாக எஸ்.காசிவேல், என்.வெங்கிடசாமி, பேராசிரியர் எஸ்.செல்வநாயகம் ஆகியோர் செயல்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.