அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டி.மானகசேரியில் 468 பயனாளிகளுக்கு வேஷ்டி-சேலை: ஒன்றியக்குழுத் தலைவர் காளிமுத்து வழங்கினார்

இதற்கான விழா வட்டாட்சியர் ஐ.திரௌபதி தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் வரவேற்றார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2013, 9:26 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சியில் 468 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து வழங்கினார்.

இதற்கான விழா வட்டாட்சியர் ஐ.திரௌபதி தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் வரவேற்றார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டார். முதல்வரின் திட்டங்கள் முழு அளவில் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை அ.தி.மு.க. தொண்டர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தொண்டர்கள், முதல்வரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.

அ.தி.மு.க. தொகுதி இணைச் செயலாளர் ராமையாபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம மக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் செந்தூர்பாண்டி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.