அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேரூராட்சி இளநிலை உதவியாளருக்கு சிறந்த சேவைக்கான ஆட்சியர் விருது

பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஆ.காமராஜூக்கு சிறந்த சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் வழங்கி

News image
Updated On :26 ஜனவரி 2013, 8:46 am

கோ.ஜெயக்குமார்

பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஆ.காமராஜூக்கு சிறந்த சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் வழங்கி கௌரவித்தார்.

விருதுநகர் மாவட்டம், சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் ஆ.காமராஜ். இவர் மாவட்ட அரசு ஊழியர் (பேரூராட்சிகள் துறை) சங்க மாவட்டத் தலைவராகவும் உள்ளார். முதலிபட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில், பேரூராட்சியின் பணியாளர்கள் சுமார் 60 பேருடன், காமராஜ் நேரிடையாக சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்துள்ளார்.

அப்போது உடனடியாக மருத்துவமனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடத்தில் சுகாதரப் பணிகளை மேற்கொண்டு, தொற்று நோய் பரவாமல் முனைப்புடன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த துப்புறவுப் பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும் இந்த விருது மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், விருதுநகரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காமராஜூக்கு வழங்கி கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.