காரியாபட்டி ஒன்றியம், மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன.
குளோரினேசன் செய்தல் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், நோய்கள் வராமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.