ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இனாம்காசிரெட்டியாபட்டியில் பேவர் பிளாக் சாலை

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இனாம்காசிரெட்டியாபட்டியில் பொதுமக்கள் உபயோகத்திற்காக பேவர் பிளாக் சாலையை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

Updated On :13 மே 2013, 12:17 am IST

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இனாம்காசிரெட்டியாபட்டியில் பொதுமக்கள் உபயோகத்திற்காக பேவர் பிளாக் சாலையை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

     இனாம்காசிரெட்டியபட்டி கிராமத்தில் மழை நீர் தரையில் இறங்கும் வகையிலான பேவர் பிளாக் சாலை அமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., பாண்டியராஜனிடம் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

    தற்போது, இப்பணிகள் முடிவடைந்ததால், அதன் தொடக்க விழா அக்கிராம ஊராட்சியில் நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சித் தலைவர் டி. சந்திரன் தலைமை வகித்தார். வட்டார ஊராட்சி உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் பங்கேற்று பொதுமக்களின் உபயோகத்திற்காக சாலையைத் திறந்து வைத்தார்.

    அதையடுத்து, தாதம்பட்டி ஊராட்சியில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட கிராம இணைப்பு தார்ச் சாலை பணிகள் முடிந்த நிலையில், அதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

     நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் எம். பாண்டியராஜன், ஒன்றிய அவைத்தலைவர் சேகர் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.