திருச்சுழியில் குடிநீர் குழாய் சேதம்

திருச்சுழியில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது குழாய் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது.
Updated on
1 min read

திருச்சுழியில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது குழாய் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது.

   திருச்சுழியில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருச்சுழிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் ஆழ்குழாய் மோட்டார் அருப்புக்கோட்டை செல்லும் வழியில் சாலையோரமாக பெரிய கண்மாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

   கடந்த சில நாள்களாக மானாமதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 இப்பணியின்போது குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால், திருச்சுழியில் சில இடங்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதித்துள்ளது.

   இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவர் பாஸ்கரன் கூறுகையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சுழி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.

    திருச்சுழி கிழக்கு தெரு, பூமிநாதன் கோவில் தெருவுக்குச் செல்லக் கூடிய குழாய்கள் முற்றிலும் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது.

  சாலையமைக்கும் பணிகள் முடிந்த பின்னரே குடிநீர் குழாய்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com