தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் திருச்சுழி ஒன்றியம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. வட்டார அளவில் ம.ரெட்டியபட்டியில்

Updated On :15 நவம்பர் 2013, 6:48 pm

அனைவருக்கும் கல்வி இயக்கம் திருச்சுழி ஒன்றியம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. வட்டார அளவில் ம.ரெட்டியபட்டியில் நடைபெற்ற இப்பயிற்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்கள் 112 பேர் கலந்து கொண்டனர்.

     மாணவர்களிடம் சுகாதாரம், சர்வதேச மனப்பான்மையை வளர்த்தல், கணினி முதலிய பல்லூடக வசதிகளை கவனமாக கையாள்வதற்கான முறைகள் போன்ற தலைப்புகளில் கருத்துகள் வழங்கப்பட்டன. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.  ஆசிரியர் பயிற்றுனர்கள் கோபாலகிருஷ்ணன், சுந்தரமகாலிங்கம், கோமதி, சாந்தி ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.