விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஒன்றியங்களில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதுரை பல்நோக்கு சங்கம் சைல்டுலைன், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஒன்றியம் சைல்டுலைன் துணை மையம் சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
குழந்தைகளுக்கான தேவைகள், பிரச்னைகள் குறித்த கருத்தரங்கங்கள், சமூகம் சார்ந்த குழுக்களுக்கான கூட்டங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வுகள், சைல்டுலைன் தன்னார்வ நபர்கள் உருவாக்கம், குழந்தைகளுக்கு தனித்திறனை வளப்பதற்காக ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பொதுமக்களுக்கு சைல்டுலைன் ராக்கி கயிறுகளை கட்டியதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும், பராமரிப்பையும் உறுதி செய்வதற்கு 24 மணி நேர இலவச அவசர தொலைபேசி எண் 1098 தொடர்பு கொண்டு பேசலாம் என கூறினார்.
குழந்தைகள் தின விழாவுக்கான ஏற்பாடுகளை சைல்டுலைன் உறுப்பினர்கள் பொருட்செல்வி, அழகர்சாமி, ஞானம், சோபியா ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

