தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கிராமங்களில் குழந்தைகள் தின விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஒன்றியங்களில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதுரை பல்நோக்கு சங்கம் சைல்டுலைன், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஒன்றியம் சைல்டுலைன் துணை மையம் சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 நவம்பர் 2013, 7:00 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஒன்றியங்களில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதுரை பல்நோக்கு சங்கம் சைல்டுலைன், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஒன்றியம் சைல்டுலைன் துணை மையம் சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    குழந்தைகளுக்கான தேவைகள், பிரச்னைகள் குறித்த கருத்தரங்கங்கள், சமூகம் சார்ந்த குழுக்களுக்கான கூட்டங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்தாய்வுகள், சைல்டுலைன் தன்னார்வ நபர்கள் உருவாக்கம், குழந்தைகளுக்கு தனித்திறனை வளப்பதற்காக ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பொதுமக்களுக்கு சைல்டுலைன் ராக்கி கயிறுகளை கட்டியதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும், பராமரிப்பையும் உறுதி செய்வதற்கு 24 மணி நேர இலவச அவசர தொலைபேசி எண் 1098 தொடர்பு கொண்டு பேசலாம் என கூறினார்.

  குழந்தைகள் தின விழாவுக்கான ஏற்பாடுகளை சைல்டுலைன் உறுப்பினர்கள் பொருட்செல்வி, அழகர்சாமி, ஞானம், சோபியா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.