மல்லாங்கிணறில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நுகர்வோர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணைச் செயலர் சின்னராஜா தலைமை வகித்தார். நகரச் செயலர் தங்கம், ஆலோசகர் தங்கப்பாண்டி, துணைச் செயலர் சின்னத்தம்பி, இணைச் செயலர்கள் முருகன், கருப்பசாமி முன்னிலை வகித்தனர். தென்மாநில அமைப்பாளர் கிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைத்துப் பேசினார். இளைஞரணி நிர்வாகிகள் ஜெயமணி, ஆனந்தராஜ், விருதுநகர் நகர நிர்வாகிகள் ஞானசேகரன், சக்திவேல், பாண்டியன் நகர் நிர்வாகிகள் கருப்பசாமி, திருப்பதி, சீனிவாசகன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.