திருச்சுழி ஒன்றியம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் ம.ரெட்டியபட்டியில் நடைபெற்றது.
வட்டார அளவில் நடைபெற்ற இப்பயிற்சியில் தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்புகளில் கற்பிக்கும் 158 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் கடமைகள், கிராம அளவிலான பாதுகாப்பு குழு ஆகியவை தொடர்பான கருத்துகள் வழங்கப்பட்டன.
பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் செயல்பட்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.