திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பேரிடர் தடுப்புப் பயிற்சி மையம்

திருச்சுழி பகுதியில் இயற்கை பேரிடர் தடுக்க கிராம அளவிலான பாதுகாப்பு, தகவல், பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :9 நவம்பர் 2014, 7:20 pm

திருச்சுழி பகுதியில் இயற்கை பேரிடர் தடுக்க கிராம அளவிலான பாதுகாப்பு, தகவல், பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி மற்றும் மதுரையை மையமாக கொண்டு இயங்கிவரும் ஸ்பீச், ஆர்.சி.பி.டி.எஸ், நிறுவனங்கள் குழந்தைகளுக்காக பல்வேறு சேவைப் பணிகளை செய்து வருகின்றன.

குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்தல், இடைநின்ற பள்ளி மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

தற்போது இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்பீச் நிறுவனம் கிராம அளிவிலான பேரிடர் பாதுகாப்பு தகவல் மையத்தை திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டி கிராமத்தில் அமைத்துள்ளது. கிராம அளவில் பேரிடர் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சியளிப்பது, விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி குறித்த ஆலோசனைகள் ஆகிய பணிகளும் இந்த மையங்கள் மூலம் நடைபெறும் என நிறுவன திட்ட இயக்குநர் எர்ஸ்கின், தொடர்பு அலுவலர் லிபிசாப்சன் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.