மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நரிக்குடி ஒன்றிய வட்டார வள மையம் சார்பில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், மூளைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நரிக்குடி ஒன்றிய வட்டார வள மையம் சார்பில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், மூளைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில், மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள், மாற்றுத் திறனாளி அல்லாத முதல் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள், அங்கன்வாடி உறுப்பினர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விவேகராஜா, சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் செயல்பட்டனர்.

ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com