ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

குன்னிமுத்து தின்ற மாணவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் குன்னிமுத்து தின்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் குன்னிமுத்து தின்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில்-குன்னூரைச் சேர்ந்தவர் சி.கருப்பையா (36). இவருக்கு இஷாந்தராஜ் (8), டேவிட்ராஜ் ஆகிய இரு மகன்கள்.

இஷாந்தராஜ், எஸ்.ராமச்சந்திராபுரம், தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சுமார் 10 தினங்களுக்கு முன் பள்ளி அருகே வேலியிலிருந்த குன்னிமுத்து செடியிலிருந்த காய்களை பறித்துத் தின்றுள்ளார். இது குறித்து தகவலறிந்து கருப்பையா மகனுக்கு நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இரு தினங்களுக்குப் பின்னர் இஷாந்தராஜ் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருதத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிந்தார்.

இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.