சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராஜபாளையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு

ராஜபாளையம் பகுதியில் நீண்டநாள்களுக்கு பிறகு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் அகலமாக காணப்பட்ட பிரதான சாலைகள் மீண்டும்

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:13 am

DIN

ராஜபாளையம் பகுதியில் நீண்டநாள்களுக்கு பிறகு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் அகலமாக காணப்பட்ட பிரதான சாலைகள் மீண்டும் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்குள் ளாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையம் அம்பலபுளி பஜார், முடங்கியாறு சாலைப் பகுதிகளில் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகைகள், படிக்கட்டுகள், தள்ளுவண்டிகள் ஆகியவை அகற்றப்பட்டன.
இதையடுத்து சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அகலமாக இருந்தது. பின்னர் நாளடைவில் சாலையில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அனைத்தும் சிறிது சிறிதாக முன்னேறியும், தள்ளுவண்டி கடைகளின் ஆக்கிரமிப்புகளும் தொடங்கி விட்டன. ஆனால் இதனை அதிகாரிகளின் கண்டுகொள்ளாததால், மீண்டும் பழைய நிலை உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.