அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:24 am

DIN

விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து,  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சங்தத்தின் வட்டார சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் தமிழரசி தலைமை வகித்தார். இணைச்செயலாளர் கருப்பையாராஜா முன்னிலை வகித்தார்.கிளைச்செயலாளர் சிவசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.
  சிவகாசி: சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிவகாசி கிளைத் தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். இதில் 17 பெண்கள் 3 ஆண்கள் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.
 சாத்தூர்:   சாத்தூரில் உள்ள மதுரை பேருந்து நிறுத்தம் முன்பும், வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  சாத்தூர்,வெம்பக்கோட்டை வட்டக் கிளையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை:  அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.