ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாங்கோவில் தெரு, அர்க்கசாலை விநாயகர், செந்தூர் முருகன், ராஜராஜேஸ்வரி கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விஸ்வகர்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகளைத் தொடர்ந்து, புதன்கிழமை மூன்று கோயில் கோபுர கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவை விஸ்வகர்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீனந்தல மடாலய 65-ஆவது பீடாதிபதி ஸ்ரீ சிவ சிவராஜ சுவாமிகள் தலைமையிலான சிவச்சாரியார்கள் நடத்தினர். இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மு.சந்திரபிரபா முத்தையா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஜெயவேல், ராக்குமுத்து, கருப்பையா, முத்துகிருஷ்ணன், கோசுகுண்டு மற்றும் திருப்பணிக்குழு தலைவர் முனியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நைட் கிளப் அடிதடி... இங்கிலாந்து அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் அதிரடி நீக்கம்!

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


