ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாங்கோவில் தெரு, அர்க்கசாலை விநாயகர், செந்தூர் முருகன், ராஜராஜேஸ்வரி கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  

Updated On :5 ஏப்ரல் 2018, 8:26 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாங்கோவில் தெரு, அர்க்கசாலை விநாயகர், செந்தூர் முருகன், ராஜராஜேஸ்வரி கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  
விஸ்வகர்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகளைத் தொடர்ந்து, புதன்கிழமை மூன்று கோயில் கோபுர கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவை விஸ்வகர்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீனந்தல மடாலய 65-ஆவது பீடாதிபதி ஸ்ரீ சிவ சிவராஜ சுவாமிகள் தலைமையிலான சிவச்சாரியார்கள் நடத்தினர். இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மு.சந்திரபிரபா முத்தையா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஜெயவேல், ராக்குமுத்து, கருப்பையா, முத்துகிருஷ்ணன், கோசுகுண்டு மற்றும் திருப்பணிக்குழு தலைவர் முனியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.