/

மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 5 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:16 am

ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 5 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில், மணல் கடத்தலை தடுக்க, துணை ஆட்சியர் தலைமையில் தினமும் ஒரு குழுவினர், மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதன்படி, மாவட்ட வழங்கல் அதிகாரி வசந்தராஜன் தலைமையில் மணல் கடத்தல் கண்காணிப்பு குழுவினர் ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, திருச்சுழி குண்டாறு பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 5 லாரிகளை பறிமுதல் செய்து ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.