கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில்  மூளைச்சாவு அடைந்த விருதுநகரைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டு, நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:01 pm

DIN

சாலை விபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில்  மூளைச்சாவு அடைந்த விருதுநகரைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டு, நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
    விருதுநகர் மாவட்டம், சாமிநத்தம் கிருஷ்ணபேரியைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துராஜன் (28). லாரி ஓட்டுநராகப் 
பணிபுரிந்து வந்த முத்துராஜன், தனது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிப்ரவரி 18-ஆம் தேதி சென்ற போது, விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். 
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,  மேல் சிகிச்சைக்காக மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி கொண்டு வரப்பட்டார். 
ஆனால்,  அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 21-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
    அதையடுத்து, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் மூலம், முத்துராஜனின் மனைவி விமலாதேவியிடம் உறுப்பு தானம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், அவரது அனுமதியின்பேரில் உடல் உறுப்பு தானத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின.
    மேலும், மருத்துவமனை டீன் மருது
பாண்டியன் உத்தரவின்பேரில், காவல்துறை, மருத்துவக் கல்லூரி 
தடயவியல் துறை ஆகியவற்றிலும் தடையில்லாச் சான்று பெறப்பட்டது. 
தொடர்ந்து, இருதயவியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் ரத்தினவேல், சிறுநீரக அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் சந்திரசேகர், சிறுநீரகவியல் துறைத் தலைவர் அருள், மயக்கவியல் துறை இயக்குநர் ஈவ்லின் ஆசிர்வாதம் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர்.
    இதில், முத்துராஜனின் இருதயம் மற்றும் ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், தோல் கோவை தனியார் மருத்துவமனைக்கும், இரு கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு, பிற நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
    மதுரை அரசு மருத்துவமனையில் இரண்டாவது முறையாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.