அருப்புக்கோட்டை நகரில் உள்ள மாரியம்மன் தெற்குத் தெரு தார்ச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. புளியம்பட்டியிலிருந்து மலையரசன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இச்சாலையைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.மேலும் இதே சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர்.
அப்போது சைக்கிளில் வரும் பள்ளி மாணவர்கள் அங்குள்ள பள்ளங்களில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









