சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பகுதியில் தனிநபர் கழிப்பறைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, திட்ட மண்டல அலுவலர் மணிக்கவாசகம் தலைமை வகித்தார். ஆணையர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கலட்சுமி, ஒன்றியப் பொறியாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒன்றியப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தக்கூடாது எனவும், வீட்டுக்கு ஒரு தனிநபர்கழிப்பறை அவசியம் எனவும், தனிநபர் கழிப்பறை அமைக்க அரசு மானியம் ரூ. 12 ஆயிரம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில், கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நூறு சதவீதம் தனிநபர் கழிப்பறை அமைப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

