விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மக்கள் தொடர்பு முகாம்: பேருந்தில் சென்ற ஆட்சியர்

காரியாபட்டி அருகே கழுவனச்சேரி கிராமத்தில் செவ்வாய்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. 

Updated On :23 ஜனவரி 2019, 7:42 am IST

காரியாபட்டி அருகே கழுவனச்சேரி கிராமத்தில் செவ்வாய்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. 
இம்முகாமில், 94 பயனாளிகளுக்கு ரூ. 28.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட 148 பயனாளிகளுக்கு ரூ.32,23,860 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்அ.சிவஞானம் வழங்கினார். முன்னதாக, ஆட்சியர் மற்றும் அனைத்து அலுவலர்களும் முகாமிற்கு அரசுப் பேருந்தில் சென்றனர். 
முகாமில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லெட்சுமிப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகதீஸ்வரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணிசேகரன், காரியாபட்டி வட்டாட்சியர் ராமநாதன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.