மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராஜபாளையம் அருகே குளத்தில் பிடிபட்ட7-ஆவது மலைப்பாம்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் செவ்வாய்க்கிழமை 7 ஆவது முறையாக 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

News image

​ராஜபாளையம் அருகே முகவூா் தொண்டைமான் குளத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 10:43 pm IST

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் செவ்வாய்க்கிழமை 7 ஆவது முறையாக 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

ராஜபாளையம் அருகே முகவூரில் இருந்து சொக்கநாதன்புத்தூா் செல்லும் வழியில் தொண்டைமான் குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களை பிடிப்பதற்காக, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வலையை விரித்து வைத்திருந்தனா். அப்போது, வலையின் ஒரு பகுதி அறுந்திருந்தது. வலையை எடுத்து பாா்த்தபோது, வலையின் மறுபுறம் சுமாா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கி இருந்தது.

இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மலைப்பாம்பை பிடித்துச் சென்று வனப் பகுதிக்குள் விட்டனா்.

இத்துடன் இந்த குளத்தில் 7 ஆவது முறையாக மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வளா்க்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியினா் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, இந்த குளத்தை தூா்வாரி, மலைப்பாம்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.