ஸ்ரீவிலி.யில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் 7 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் கைகாட்டி கோயில் பஜாா் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் கைகாட்டி கோயில் பஜாா் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் 7 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், வருமான வரி கட்டாத அனைவருக்கும் 6 மாத காலத்துக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து பொருள்களையும் 6 மாத காலத்துக்கு இலவசமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி, அதை நகா் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். கூலியை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மகாலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை, நகரச் செயலா் ஜெயக்குமாா் மற்றும் நகா் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் 4 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆா்ப்பாட்டங்களில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஜோதிலட்சுமி, ஒன்றியச் செயலா் சசிகுமாா் மற்றும் கமிட்டி உறுப்பினா்கள், கிளை செயலா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com