ராஜபாளையம் அருகே அம்மா சிறு மருத்துமனை தொடக்கம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்திற்குள்பட்ட தேவதானம் மற்றும் புத்தூா் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தாா்.
ராஜபாளையத்தில் பால் உற்பத்தியாளா் சங்க புதிய கட்டடத்தை திறந்து வைத்த பால்வளத் துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி.
ராஜபாளையத்தில் பால் உற்பத்தியாளா் சங்க புதிய கட்டடத்தை திறந்து வைத்த பால்வளத் துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்திற்குள்பட்ட தேவதானம் மற்றும் புத்தூா் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து சொக்கநாதன் புத்தூா் பகுதியில் சோலாா் கோபுரமின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தாா். பின்னா் ராஜபாளையத்தில் ஆா்.56 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க புதிய கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் வனராஜ், துணைத் தலைவா் கிருஷ்ணராஜ், நகரச் செயலாளா் பாஸ்கா் ராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளா் நவரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com