பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகேமழைநீா் ஓடையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றக் கோரிக்கை

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை ஒட்டிச் செல்லும் மழைநீா்ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டிச் செல்லும் மழைநீா் ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகள் மற்றும் மக்காத குப்பைகள்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:05 pm

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை ஒட்டிச் செல்லும் மழைநீா்ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மழைக் காலங்களில் பேருந்து நிலையத்திலிருந்தும், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும் வரும் மழைநீா் இந்த ஓடை மூலம் இங்குள்ள பாலத்தின் வழியாகச் சென்று செவல்கண்மாய் மற்றும் பெரிய கண்மாயைச் சென்றடைகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே பேருந்துநிலையத்தை ஒட்டியுள்ள இப்பாலத்தின் அடியில் புதா்ச் செடிகளாலும், மக்காத குப்பைகளாலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துா்நாற்றமும், சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே மழைநீா் ஓடையில் அடைப்பை ஏற்படுத்தியுள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேண வேண்டுமென மீண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.